» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆளுநரின் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு: விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திருமாவளவன்!

வியாழன் 7, மே 2026 11:29:18 AM (IST)

"எங்களுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் அரசியல் இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைப் பதவியேற்க அழைக்காத ஆளுநரின் முடிவிற்கு தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பதைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் காண்பித்த பிறகுதான் வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலத்தாமதம் செய்வது அரசியல் குழப்பத்திற்கு வழிவகுக்கும். இது ஏற்புடையதல்ல என்று அவர் விமர்சித்துள்ளார்.

விஜயைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருமாவளவன், "எங்களுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்த விஜய், இன்றும் இரண்டாவது முறையாகச் சந்தித்துத் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவனின் இந்த ஆதரவு அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் தவெக-விற்குச் சாதகமான ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory