» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் கடும் வறட்சி : ஓடை போல் மாறிய தாமிரபரணி ஆறு; குறையும் அணைகளின் நீர்மட்டம்!
புதன் 6, மே 2026 8:26:37 PM (IST)

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆறு போதிய நீர்வரத்தின்றி வறண்டு ஓடை போல் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது. மே 4-ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்), வரும் மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.ஆங்காங்கே பெய்யும் லேசான மழை கோடை வெப்பத்தைத் தணிக்கப் போதுமானதாக இல்லை.
அணைகளின் நீர்மட்டம் சரிவு:
கோடை வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றி வருவதால், மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது:
பாபநாசம் அணை: 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 44 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை: 118 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது.
அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால், எப்போதும் ஆர்ப்பரித்து ஓடும் தாமிரபரணி ஆறு தற்போது மிகவும் குறுகி ஓடை போல் காணப்படுகிறது. குறிப்பாக, நெல்லை மாநகரப் பகுதியில் ஆற்றில் சாக்கடை நீர் கலந்து ஓடுவதால் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறி அசுத்தமாகக் காட்சியளிக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் தொழிற்பழகுநர் முகாம்: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
புதன் 6, மே 2026 8:44:22 PM (IST)

கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
புதன் 6, மே 2026 5:20:49 PM (IST)

தூத்துக்குடியில் த.வெ.க. பேனர் கிழிப்பு: திமுக பிரமுகர் கைது
புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
புதன் 6, மே 2026 4:15:21 PM (IST)

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு; ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
புதன் 6, மே 2026 3:50:58 PM (IST)

ஸ்டாலின் உடன் ரஜினி சந்திப்பு: இக்கட்டான நேரத்தில் உறுதுணையாக இருப்பேன் என உறுதி!
புதன் 6, மே 2026 3:20:09 PM (IST)


