» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:00:07 AM (IST)
மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசாணைகள் மற்றும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையரின் கடித வழிகாட்டுதலின்படி, மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் (FL1 உரிமம்), கடைகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (Bar), தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் இவை அனைத்தும் மே 1-ஆம் தேதி கட்டாயம் மூடப்பட வேண்டும்.
விதிகளை மீறி அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)

வாக்கு எண்ணும் மையம் சிசிடிவி கண்காணிப்பு அறையில் ஜனநாயகன் பார்த்த ஊழியர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:35:26 PM (IST)

மதுரையில் மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:49:08 AM (IST)

சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:57:05 AM (IST)

விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயம், தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:48:40 AM (IST)

தி.மு.க. வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகைகள் கொள்ளை: தம்பதி மற்றும் இளம்பெண் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:25:59 AM (IST)


