» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு

திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)



சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் நாள் தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூனியூர் பகுதியில் தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா இன்று (13.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 6,027 வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவிற்கு விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான நேற்று (12.04.2026), மாவட்டத்தில் மொத்தம் 2,340 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, 6027 வாக்காளர்கள் தபால் வாக்குபதிவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள். 
அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதிற்குட்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு சேகரிப்பு பணிகள் 12.04.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றைய தினம் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 352 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்காளர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 305 வாக்காளர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 199 வாக்காளர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளார்கள். 

மாற்றுதிறனாளி வாக்காளர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 252 நபர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 261 நபர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 101 நபர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 122 நபர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 188 நபர்களும் என திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2340 வாக்குப்பதிவு செய்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory