» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புழல் சிறையிலிருந்து தாக்கல் செய்த ஹரி நாடார் மனு தள்ளுபடி: தேர்தல் அலுவலர் அதிரடி!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடச் சிறையிலிருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்த சத்திரிய சான்றோர் படை கட்சித் தலைவர் ஹரி நாடாரின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நிராகரித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி 'சத்திரிய சான்றோர் படை' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துச் சிறையிலிருந்தே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஹரி நாடார் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விபரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் தனக்கு 11.6 கிலோ தங்கம் இருப்பதாகவும், 6 சொகுசு கார்கள் மற்றும் ₹12 லட்சம் மதிப்பிலான இதர சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் கூர்ந்தாய்வின் போது, ஹரி நாடாரின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் தீவிரமாகப் பரிசீலித்தார். இறுதியில், ஹரி நாடார் சிறையிலிருந்து தனது முகவர் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்தது தேர்தல் விதிமுறைகளின்படி செல்லாது எனக் கூறி அவரது மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory