» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - கச்சகுடா இடையே புதிய வாராந்திர ரயில் சேவை நாளை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி !
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:36:54 PM (IST)

தூத்துக்குடி மற்றும் தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் (கச்சகுடா) இடையேயான புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை நாளை (08.04.2026) முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த புதிய ரயில் சேவை, தென் தமிழக மக்களுக்கும் ஹைதராபாத் செல்லும் பயணிகளுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி - கச்சகுடா (17616): ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 07:40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 13:25 மணிக்கு கச்சகுடாவை சென்றடையும்.
கச்சகுடா - தூத்துக்குடி (17615): மறுமார்க்கமாக, கச்சகுடாவில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 19:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 22:30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
இந்த ரயில் தமிழகம் மற்றும் ஆந்திரா/தெலங்கானா மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது
தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் போர்ட், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி.
ஆந்திரா & தெலங்கானாவில் சித்தூர், திருப்பதி, கடப்பா, அனந்தபூர், தர்மாவரம், கர்னூல் டவுன், கத்வால், ஜட்சர்லா உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
ஆன்மீகத் தலங்களான திருவண்ணாமலை, சிதம்பரம் மற்றும் முக்கிய வணிக நகரங்களை இந்த ரயில் நேரடியாக இணைப்பதால், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி துறைமுக நகரத்திலிருந்து ஹைதராபாத்திற்கு நேரடி ரயில் சேவை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் பரப்புரை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:33:10 AM (IST)

ராஜபாளையம் தொகுதி : வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:46:10 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)

