» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தீப்பெட்டி குடோனில் நேற்று காலை 8:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜயாபுரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த கார்த்திக்கின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுடலைமுத்து (42) மற்றும் கணேசன் (47) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory