» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் வளர்ச்சியில்லை, வீழ்ச்சியில்தான் உள்ளது: திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் சாடல்

திங்கள் 2, மார்ச் 2026 5:34:47 PM (IST)

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/nainar43i3i_1772453104.jpgசெய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "பாஜகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமூகமாக முடிந்துவிட்டன. இருப்பினும், தற்போது வரை தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. தேர்தல் ஆணையம் முறைப்படி தேர்தல் தேதியை அறிவித்த பின்னரே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும்," எனத் தெளிவுபடுத்தினார்.

தமிழக வெற்றி்க் கழகம் (தவெக) பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அதுகுறித்து தவெக தலைமையிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்று சுருக்கமாகப் பதிலளித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் டெல்லிப் பயணம் குறித்துக் கேட்டபோது, "அது அவருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்" என்றார்.

தமிழக முதலமைச்சரின் 'வளர்ச்சி' குறித்த பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:   சட்டம் ஒழுங்கு சீர்கேடு: "தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறுவது தவறு. உண்மையில் இன்று தமிழகம் அனைத்து வகையிலும் தாழ்ந்து போயுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, 50% பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகம் உள்ளது. 2 வயதுக் குழந்தை முதல் முதியவர் வரை யாரும் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் நிலவுகிறது."

"மாணவர்கள் கையில் புத்தகம் இருக்க வேண்டிய இடத்தில் இன்று கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. இந்தியாவிலேயே அதிகத் தற்கொலைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது. திமுகவின் தேர்தல் அணுகுமுறை குறித்து விமர்சித்த அவர், "உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பது மட்டுமே திமுகவின் ஒரே நோக்கம். அதற்காகவே அவர்கள் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றனர். அவர்களிடம் பண பலமும் அதிகார பலமும் இருக்கலாம், ஆனால் அதைவிட 'மக்கள் பலம்' பெரியது என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும்," எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory