» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)
நெல்லையில் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், சிவகங்கையைச் சேர்ந்த ராஜலட்சுமி (43) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜினி (28) ஆகிய இருவரும் தங்களை அதிகாரிகளாகக் காட்டிப் பழகியுள்ளனர். நெல்லை சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ.8 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் மோசடி உறுதியானதைத் தொடர்ந்து, சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்பெருமை பேசும் விஜய் ஒரு கிணற்றுத் தவளை; திமுகவின் பி டீம் : பாஜக விமர்சனம்
சனி 14, பிப்ரவரி 2026 4:17:13 PM (IST)

விஜய்- திரிஷா குறித்து அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கண்டனம்!
சனி 14, பிப்ரவரி 2026 12:53:03 PM (IST)

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)

விருப்ப மனு சமர்ப்பிக்க பிப்.20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு : தவெக அறிவிப்பு
சனி 14, பிப்ரவரி 2026 12:26:53 PM (IST)

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு குளறுபடி: சார்புச் செயலாளர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
சனி 14, பிப்ரவரி 2026 12:08:03 PM (IST)

