» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!

சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)

நெல்லையில் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், சிவகங்கையைச் சேர்ந்த ராஜலட்சுமி (43) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜினி (28) ஆகிய இருவரும் தங்களை அதிகாரிகளாகக் காட்டிப் பழகியுள்ளனர். நெல்லை சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ.8 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர்.

இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் மோசடி உறுதியானதைத் தொடர்ந்து, சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory