» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலத்தில் இருந்து தவறி விழுந்து சிஎஸ்ஐ பேராயர் உயிரிழப்பு போலீஸ் விசாரணை!

சனி 14, பிப்ரவரி 2026 11:31:52 AM (IST)

ஈரோடு - சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட  சிஎஸ்ஐ ஈரோடு சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயராக பொறுப்பேற்ற ஜேக்கப் லிவிங்ஸ்டன் இன்று காலை 7 மணி அளவில் ஈரோடு ப்ரப் ரோடு பாலத்தில் வாக்கிங் செல்லும்போது பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா?பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? பாலத்தில் சென்ற வாகனம் ஏதும் அவர் மீது மோதியதில் கிழே விழுந்தாரா என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory