» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
சனி 24, ஜனவரி 2026 8:11:26 AM (IST)
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் சரகப் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை, தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டி (70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து தட்டிக்கேட்ட அச்சிறுமியின் பெற்றோருக்கு, முதியவரின் மகளான தூத்துக்குடியைச் சேர்ந்த வேதசெல்வி (42), மகன் ராஜா (34) ஆகியோர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் மகளிர் போலீசார் முதியவர் உள்பட 3 பேர் மீது போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்தனர். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2-இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரத்து, தங்கபாண்டிக்கு, இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், வேதசெல்வி, ராஜா ஆகியோருக்கு தலா ரூ.5000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினர், அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 24, ஜனவரி 2026 5:23:08 PM (IST)

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
சனி 24, ஜனவரி 2026 4:41:51 PM (IST)

இந்தியை திணித்து தமிழை அழிக்க நினைத்தது காங்கிரஸ்: சீமான் குற்றச்சாட்டு
சனி 24, ஜனவரி 2026 3:59:25 PM (IST)

மழைநீர் வடிகால்வாயில் கொசுவலை போர்த்தியது ஏன்? - மேயர் பிரியா விளக்கம்
சனி 24, ஜனவரி 2026 3:32:33 PM (IST)

சத்துணவு பணியாளர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சனி 24, ஜனவரி 2026 11:53:11 AM (IST)

