» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு..?
வியாழன் 22, ஜனவரி 2026 12:14:30 PM (IST)

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நாளை மதியம் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ள இருக்கிறார். இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்கூட்டியே வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக பியூஷ் கோயலை சந்தித்து தெரிவித்தார். இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது.
அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நாளை மதியம் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொள்ள இருக்கிறார். இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில், மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்கூட்டியே வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக பியூஷ் கோயலை சந்தித்து தெரிவித்தார். இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது.
அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதை புழக்கத்தால் நடைபெறும் வன்முறைகளில் தமிழ்நாடு முதலிடம் - சீமான் விமர்சனம்!
வியாழன் 22, ஜனவரி 2026 12:07:21 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
வியாழன் 22, ஜனவரி 2026 11:52:45 AM (IST)

திமுகவில் இணையவில்லை, அரசியலில் இருந்தே விலகுகிறேன்: குன்னம் ராமச்சந்திரன் திடீர் முடிவு.!
வியாழன் 22, ஜனவரி 2026 11:38:58 AM (IST)

மதுராந்தகத்தில் நாளை பிரதமர் மோடி பொதுக் கூட்டம்: 15,000 போலீசார் பாதுகாப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 10:36:56 AM (IST)

நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)

ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.6 லட்சம் பொருட்கள் மீட்பு: துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு!
வியாழன் 22, ஜனவரி 2026 8:08:40 AM (IST)

