» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
திங்கள் 19, ஜனவரி 2026 12:30:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.
இதனால், ஆத்திரமடைந்த போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டியளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் மனதில் முதல்வர் ஸ்டாலின்: திமுகவில் இணைந்தது குறித்து வைத்திலிங்கம் விளக்கம்!!
புதன் 21, ஜனவரி 2026 11:16:21 AM (IST)

ஜனநாயகன் ரிலீஸ் மேலும் தாமதம்: தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு!
புதன் 21, ஜனவரி 2026 8:28:12 AM (IST)

நெல்லை அருகே கூட்டம், கூட்டமாக வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:03:08 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் : 600பேர் கைது
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:35:56 PM (IST)

