» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ஒருவர் கள்ளத்துப்பாக்கியை வாங்கி பதுக்கி வைத்து அதனை வெளியே விற்பனை செய்ய இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவில் மேலப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மேலப்பாளையம் அக்பர் தெருவை சேர்ந்த கபீர் முகைதீன் மகன் அமீர் சுகைல் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, அமீர் சுகைல் தனது நண்பரான முசாம்பீர் என்பவருடன் சேர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரத்தினம்பாலா (40) என்பவரிடம் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கியை வாங்கி திண்டுக்கல்லில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஆனால், அந்த துப்பாக்கியை வாங்கியவர் அது சரியாக சுடவில்லை எனக்கூறி அதனை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். இதனால் அவர்கள் அந்த துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக மீண்டும் ரத்தினம் பாலாவிடம் கொடுத்தது தெரியவந்தது. ரத்தினம் பாலா நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வில் பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கி வாங்கி கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, அமீர் சுகைலை கைது செய்தனர். இரவோடு இரவாக ரத்தினம் பாலா வீட்டுக்கு சென்று அவரையும் கைது செய்தனர்.
அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கைத்துப்பாக்கி, 3 வெடித்த தோட்டாக்கள், ஒரு உடைந்த தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று காலையில் முசாம்பீரும் கைதானார். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில் கைத்துப்பாக்கி வாங்கிய நபர் யார்? என்பது குறித்தும், அவரை பிடிக்கவும் போலீசார் விரைந்து உள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா: பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
புதன் 4, மார்ச் 2026 12:55:26 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
புதன் 4, மார்ச் 2026 8:35:15 AM (IST)

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

