» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரான பேராசிரியை நிகிதா, செய்தியாளர்களிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார், கடந்த காலங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டு புகாரே அடிப்படை காரணமாக அமைந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தனிப்படை காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதிமன்ற விசாரணை:
சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், மார்ச் 4-ஆம் தேதி (இன்று) நீதிபதி அசன் முகமது முன்னிலையில் நிகிதா நேரில் ஆஜரானார். விசாரணையின் போது, நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைக்க விரும்புவதாக சிபிஐ தெரிவித்தது. அதற்குத் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என நிகிதா தெரிவித்தார். இதனை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நிகிதா கூறியதாவது: அரசியல் தொடர்பில்லை: "எனக்கு எந்தவிதமான அரசியல் பின்புலமும் கிடையாது. தனிப்பட்ட முறையிலேயே இங்கு வந்துள்ளேன். முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். சம்பவத்தின் உண்மைத்தன்மை தெரியாமல் சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். இதனால் நான் பணிபுரியும் இடத்தில் கூட மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
முதலில் அறநிலையத்துறை அதிகாரிகளிடமே புகார் அளித்தேன். அதன் பின்னரே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு நடந்தவை எனக்குத் தெரியாது. என் தொலைபேசியில் இருந்து எந்த அழைப்பும் செல்லவில்லை என்பது சிபிஐ விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. அஜித்குமார் உயிரிழந்த செய்தி கேட்டு நாங்களே அழுதோம். ஒரு தாய்க்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. நான் காவல் நிலையத்தில் இருந்தவரை அவர் நலமாகவே இருந்தார். அதற்குப் பிறகு அவரைத் தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது என்றார்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் முன்னாள் டிஎஸ்பி சண்முகசுந்தரம் தாக்கல் செய்த முன்பிணை மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஸ்ரீமதி அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா: பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
புதன் 4, மார்ச் 2026 12:55:26 PM (IST)

