» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்
புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)
தென்காசியில் அரசு வழக்கறிஞர் அவரது அலுவலகம் அருகிலேயே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி கூலக்கடை பஜார் பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இன்று மதியம் அவரது அலுவலகத்திற்கு அருகில் அவர் நின்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அரசு வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
வியாழன் 4, டிசம்பர் 2025 12:04:01 PM (IST)

டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியீடு
வியாழன் 4, டிசம்பர் 2025 11:56:27 AM (IST)

தூத்துக்குடியில் 7 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:01:52 AM (IST)

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 10:43:16 AM (IST)

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:27:42 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை எரிப்பு!
புதன் 3, டிசம்பர் 2025 8:19:45 PM (IST)


.gif)