» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

வியாழன் 4, டிசம்பர் 2025 12:04:01 PM (IST)

கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கவின் என்பவர் கடந்த ஜூலை மாதம் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையும், சப்-இன்ஸ்பெக்டருமான சரவணன் ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "இந்த சம்பவம் நடந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர எனக்கும், அந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கவின் கொலை சம்பவத்தின்போது மனுதாரர் விடுமுறையில் இருந்துள்ளார். எனவே இந்த கொலை சம்பவத்துக்கும், மனுதாரருக்கும் தொடர்பு உள்ளது என்று சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முரளிசங்கர் நேற்று பிறப்பித்தார். அப்போது, கவின் கொலை வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் மனுதாரரின் ஜாமீன் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory