» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)
கூடங்குளம் கட்டிட ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை-பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (30). கட்டிட ஒப்பந்ததாரரான இவரிடம், நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி (34) என்பவர் தன்னை உதவிகலெக்டர் என்று கூறியதுடன் வடக்கன்குளத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை மண்டல அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். தொடர்ந்து அவர்கள், தன்னிடம் 17 பவுன் நகை, ரூ.8½ லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறி பிரவீன் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனு அளித்தார்.
எஸ்பி உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி சத்யா தேவி மற்றும் 22-ந்தேதி செல்லத்துரை என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி சம்பவத்தின் போது பயன்படுத்திய ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்!
ஞாயிறு 23, நவம்பர் 2025 6:05:45 PM (IST)

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
சனி 22, நவம்பர் 2025 9:30:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.85 லட்சம் மோசடி வழக்கு: மேலும் 2பேர் கைது!
சனி 22, நவம்பர் 2025 8:19:58 PM (IST)

த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: 2000 பேருக்கு மட்டும் அனுமதி!
சனி 22, நவம்பர் 2025 5:33:44 PM (IST)

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 22, நவம்பர் 2025 4:22:46 PM (IST)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)


.gif)