» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கந்த சஷ்டி விழா 2வது நாள் : வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா
வியாழன் 23, அக்டோபர் 2025 8:26:08 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழா 2வது நாளான இன்று சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு தீபாராதனையும், மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
திருவிழாவின் 2வது நாளான இன்று இரவு சுப்பிரமணிய சுவாமி வெள்ளி சப்பரத்தில் ரத வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகுறிது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மகமை பரிபலான சங்கத்தின் தலைவர் பிரமநாயகம், செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், துணைத் தலைவர் ராமலிங்கம், உதவிச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.157 கோடி: பாஜக வரவேற்பு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:38:51 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அனுமதி!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:50:54 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம்: பைசன் படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)
