» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:38:19 AM (IST)
சென்னை கோயம்பேட்டில் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டார்.

முன்னதாக பஸ்சில் இடம் பிடிப்பதற்காக தனது பையை பஸ் பக்கவாட்டு வழியாக சீட்டில் வைத்துவிட்டு, படிக்கட்டு வழியாக உள்ளே ஏறி சென்றார். அப்போது அவரது பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண், வரலட்சுமியிடம் நான் உங்கள் பையை பத்திரமாக எடுத்து வைத்து உள்ளேன் என்று கூறி பையை அவரிடம் கொடுத்து விட்டு, சிறிது நேரத்தில் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார்.
வரலட்சுமி வீட்டுக்கு சென்ற பிறகு தனது பையில் வைத்திருந்த 2½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். பஸ்சில் பின்இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வரலட்சுமி பயணம் செய்த பஸ்சில் இருந்து சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் இறங்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் வரலட்சுமியின் நகையை திருடியது திருப்பத்தூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த பாரதி (56) என்பதும், இவர் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருவதும் தெரியவந்தது.
தி.மு.க.வைச் சேர்ந்த பாரதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் வரலட்சுமியின் பையில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் மீது ஏற்கனவே ஆம்பூர், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நகை திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
ஊராட்சி மன்ற தலைவியான பிறகு திருட்டை விட்டுவிடுமாறு அவரது உறவினர்கள், நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் அவர், பழசை மறக்காமல் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:44:12 PM (IST)

கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் மன வருத்தம் அளிக்கிறது : நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:51:42 PM (IST)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம்: அன்புமணி வலியுறுத்தல்
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:28:28 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:19:09 PM (IST)

கோவில்பட்டி மேற்கு நிலையத்திற்கு முதல்வர் விருது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:40:33 PM (IST)

அனல்மின்நிலைய ஒப்பந்தத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 12:46:45 PM (IST)

உண்மSep 7, 2025 - 11:11:32 AM | Posted IP 104.2*****