» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரம்புட்டான் பழவிதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் சாவு: நெல்லையில் சோகம்!!

வெள்ளி 4, ஜூலை 2025 8:07:59 AM (IST)

நெல்லையில் ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

நெல்லை மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் நிஜாம் (35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகனும் உண்டு. சிறுவன் அருகே உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்காக ரம்புட்டான் பழங்களை வாங்கி உள்ளனர். 

அதில் ஒரு பழத்தை ரியாஸ் எடுத்து சாப்பிட்டான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பழத்தின் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற பழங்கள் வழுவழுப்பாக இருப்பதால் தொண்டையில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள், முதியவர்கள் ரம்புட்டான் பழத்தை கவனமுடன் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory