» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்: டியூஜே தலைவர் சுபாஷ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 11:36:48 AM (IST)
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு பாதுகாப்பு தரவில்லை என்றால், தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த மண்ணைப் பற்றியும், மக்களைப் பற்றியும், கொஞ்சம் கூட கவலைப்படாத ஆட்சியாளர்கள், சமூக விரோதிகளையும், களிம வளக் கொள்ளையர்களையும் பாதுகாக்க துடிக்கும் ஊழல் நிறைந்த அரசால், சகாயம் அவர்களை எப்படி பாதுகாக்க முடியும்? அன்று அரசியலில் ஒரு காமராசர் போல, இன்று அதிகாரிகளில் ஒழுவராக சகாயம் அவர்கள் இருந்து வருகிறார்!
அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றால், நாம் அனைவருமே அவருக்கு பாதுகாப்பு! சகாயம் அவர்களை நாம் பாதுகாத்தால், அவர் மண்ணும் மலைகளையும் பாதுகாப்பார், நம் இயற்கை நம் சந்த்திகளை வாழ வைக்கும்! சகாயம் அவர்கள் தமிழகத்தின் சொத்து!தமிழக அரசு அவருக்கு பாதுகாப்பு தரவில்லை என்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து நேர்மையாக அதிகாரிகளையும், சமூக போராளிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்! இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 3, ஜூன் 2025 7:59:42 PM (IST)

வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை : தோல் வியாபாரி கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:47:10 PM (IST)

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:31:25 PM (IST)

நெல்லையில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:29:08 PM (IST)

காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)

திராவிட மொழிகளின் தாய் தமிழ்; கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை: சீமான் ஆதரவு
செவ்வாய் 3, ஜூன் 2025 4:20:56 PM (IST)

இ பிரேம்குமார் துணைச் செயலாளர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை செங்கல்பட்டு மாவட்டம்Jun 2, 2025 - 01:27:57 PM | Posted IP 172.7*****