» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 3, ஜூன் 2025 7:59:42 PM (IST)

தூத்துக்குடியில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (39), கடந்த 2020ஆம் ஆண்டு திரேஸ்புரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கிளாட்சன் மகன் கிஸ்ஸிங்கர் (33), ரெஸ்லிங் மகன் லிவிங்ஸ்டன் (24), வாட்டர் டேங்க் பகுதியைச் சேர்ந்த ஜோக்கின்ஸ் மகன் மரிய ஜெர்மன் (25), வெற்றிவேல்புரத்தைச் சேர்ந்த ராஜா மகன் ரபேக் வேதா (25), இளஞ்சிறார் ஆகிய 4 பேரை கூட்டாக சேர்ந்து தாக்கியது, கொலை செய்தது ஆகிய இரு பிரிவின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, குற்றம் சாட்டப்பட்டகிஸ்ஸிங்கர், லிவிங்ஸ்டன், மரிய ஜெர்மன், ரபேக் வேதா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜர் ஆனார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory