» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 3, ஜூன் 2025 7:59:42 PM (IST)
தூத்துக்குடியில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (39), கடந்த 2020ஆம் ஆண்டு திரேஸ்புரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கிளாட்சன் மகன் கிஸ்ஸிங்கர் (33), ரெஸ்லிங் மகன் லிவிங்ஸ்டன் (24), வாட்டர் டேங்க் பகுதியைச் சேர்ந்த ஜோக்கின்ஸ் மகன் மரிய ஜெர்மன் (25), வெற்றிவேல்புரத்தைச் சேர்ந்த ராஜா மகன் ரபேக் வேதா (25), இளஞ்சிறார் ஆகிய 4 பேரை கூட்டாக சேர்ந்து தாக்கியது, கொலை செய்தது ஆகிய இரு பிரிவின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா, குற்றம் சாட்டப்பட்டகிஸ்ஸிங்கர், லிவிங்ஸ்டன், மரிய ஜெர்மன், ரபேக் வேதா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜர் ஆனார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 5, ஜூன் 2025 5:34:17 PM (IST)

மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 5, ஜூன் 2025 5:26:54 PM (IST)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 5, ஜூன் 2025 4:56:29 PM (IST)

டி.சி.டபிள்யூ சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா : இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு!
வியாழன் 5, ஜூன் 2025 4:27:19 PM (IST)

கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)

அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)
