» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)
கொலை முயற்சி, கஞ்சா, அடிதடி வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ஊத்துமலை, நெடுங்கல் தெருவை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(எ) கருவா கார்த்திக் (23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, கஞ்சா, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், கார்த்திக் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின்பேரில், கார்த்திக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (4.6.2025) அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோசடி வழக்கில் ஈமு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.7.89 கோடி அபராதம்!
வெள்ளி 6, ஜூன் 2025 5:41:54 PM (IST)

சாதிய வன்கொடுமை: பெரியப்பா பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் போலீசில் புகார்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:21:40 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:07:01 PM (IST)

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)

நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 6, ஜூன் 2025 12:22:51 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 6, ஜூன் 2025 11:46:44 AM (IST)
