» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!

வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)

அம்பையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவு காவல் நிலையங்களில் கடந்த 2023ல் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் அப்போதைய அம்பா சமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங், காவல் ஆய்வாளர் ராஜ குமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்ற முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீஸாரால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory