» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது

செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)

தெற்கு வாகைகுளத்திலுள்ள காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகளை திருடிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் சூப்பர்வைசராக கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவை சேர்ந்த கருப்பசாமி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 30.5.2025 அன்று காற்றாலை நிறுவனத்தில் வேலைகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்தபோது காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகளை காணவில்லை.

இதுகுறித்து கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் விசாரணை மேற்கொண்டார். அதில் தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சேர்ந்த மோசை(43), முத்துக்கனி(38), களக்குடியை சேர்ந்த முருகன்(54) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து. இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory