» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)
தெற்கு வாகைகுளத்திலுள்ள காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகளை திருடிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் சூப்பர்வைசராக கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவை சேர்ந்த கருப்பசாமி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 30.5.2025 அன்று காற்றாலை நிறுவனத்தில் வேலைகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்தபோது காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகளை காணவில்லை.
இதுகுறித்து கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் விசாரணை மேற்கொண்டார். அதில் தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சேர்ந்த மோசை(43), முத்துக்கனி(38), களக்குடியை சேர்ந்த முருகன்(54) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து. இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லைகா நிறுவனத்திற்கு விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 5, ஜூன் 2025 5:34:17 PM (IST)

மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
வியாழன் 5, ஜூன் 2025 5:26:54 PM (IST)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 5, ஜூன் 2025 4:56:29 PM (IST)

டி.சி.டபிள்யூ சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா : இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு!
வியாழன் 5, ஜூன் 2025 4:27:19 PM (IST)

கஞ்சா, அடிதடி, வழிப்பறி வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 5, ஜூன் 2025 4:21:55 PM (IST)

அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)
