» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை

ஞாயிறு 1, ஜூன் 2025 3:47:38 PM (IST)



கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.

சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து 54 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக சேலைகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தளவாய்புரம் ஆதிபராசக்தி மன்ற தலைவர் ராஜ் தொடங்கி வைத்தார்.


விழாவில் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா, மாவட்ட தகவல் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், இந்திரா நகர் மன்றம் அழகு மாணிக்கம், மந்திதோப்பு பண்டார முருகன், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், மன்ற பொறுப்பாளர்கள் கற்பகவள்ளி, ராதா, விஸ்வநாத்,  இராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory