» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். பாவூர்சத்திரத்தை சேர்ந்த இவர் கடந்த 2023ம் ஆண்டு தனது குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பரின் 15 வயது மகளுக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று துப்பாக்கியை வைத்து சிறுமியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்தும் போலீசார் நீலகண்டன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகியும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான நீலகண்டன் மீது ஆலங்குளம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
