» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை

ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தனியார் நிறுவனத்தில் 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 171 வழக்குகளில் மொத்தம் 754 கிலோ 333 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தடய அறிவியல் துறை சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், கஞ்சாவை தீயிலிட்டு அழித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory