» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழ்நாட்டில் 93.80 சதவீதம் தேர்ச்சி: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்!
வெள்ளி 16, மே 2025 10:36:02 AM (IST)
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். காலை 9 மணிக்கு வெளியாகி உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு இன்று வெளியாகின. அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம். ஆகும்.
தேர்ச்சி பெற்றவர்கள்: 8,17,261 (93.80 சதவீதம்)
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்
மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட4,14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்விற்கு வருகைபுரியாதவர்கள்: 15,652பேர் ஆகும்
சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக விருதுநகர் - 97.45%
தூத்துக்குடி - 96.76%
கன்னியாகுமரி - 96.66%
திருச்சி 96.61%
அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்
அரசுப் பள்ளிகளில் இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை - 97.49%
விருதுநகர் - 95.57%
கன்னியாகுமரி - 95.47%
திருச்சி - 95.42%
தூத்துக்குடி - 95.40%
தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,71,239. இதில் 817261 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 93.80% ஆகும்.
தேர்வு எழுதிய 4,35,119 மாணவிகளில் 4,17,183 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.88% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 4,36,120 மாணவர்களில் 4,00,078 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.74% தேர்ச்சி ஆகும்.
தேர்வு எழுதிய 12,290 மாற்றும் திறனாளி மாணாக்கர்களில் 11,409 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.83% ஆகும்.
தேர்வு எழுதிய 237 சிறைவாசிகளில் 230 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.05% தேர்ச்சி ஆகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்: மிக கனமழைக்கு வாய்ப்பு!
சனி 24, மே 2025 5:14:34 PM (IST)

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சனி 24, மே 2025 5:03:15 PM (IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
சனி 24, மே 2025 3:39:06 PM (IST)

சட்டப் பல்கலைக்கழகம் மாணவிக்கு ரூ.3 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சனி 24, மே 2025 3:12:50 PM (IST)

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

நீதிமன்ற அவமதிப்பு: முன்னாள் ஆட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 24, மே 2025 12:34:50 PM (IST)
