» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)
தூத்துக்குடியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இன்று 9வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 300 பெண் ஊழியர்கள் என சுமார் 1350 பேர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சி ஒப்பந்த ஊழியா்களைப் போன்று ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்துள்ள நிா்வாகத்தைக் கண்டித்து கடந்த 17ஆம் தேதி இரவு முதல் என்டிபிஎல் ஒப்பந்த ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக என்டிபிஎல் நிா்வாகத்துடன் தொழிற்சங்கத்தினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று 9 வது நாளாக என்டிபிஎல் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக அனல்மின் நிலையத்தில் சுமார் 750 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 21 தற்காலிக ஊழியர்கள் மட்டும் ஆலைக்குள் செல்ல போராட்ட குழுவினர் அனுமதி அளித்துள்ளதாகவும், இப்போராட்டம் விரைவில் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் அப்பாத்துரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)


.gif)