» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)
நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அலுவலராக பானுபிரியா பதவி ஏற்றுக் கொண்டார்.

பானுபிரியா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொறியியல் கல்லூரியில் பி.இ. இளநிலை பட்டப்படிப்பும், நெல்லை மருதகுளம் பொறியியல் கல்லூரியில் எம்.இ. முதுநிலை பட்டப்படிப்பும் படித்து உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று தீயணைப்பு துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் பயிற்சி முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தென்காசியில் பணிபுரிந்த நிலையில் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர் சமீபத்தில் நடந்த குற்றாலம் வெள்ளப்பெருக்கின்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்பான பணியில் களத்தில் இறங்கி உள்ளார். மேலும் இவர் நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் தீயணைப்பு மாவட்ட அலுவலர் என்ற பெருமையை பெறுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் 4 பெட்டிகள் அதிகரிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்குழந்தை கொடூர கொலை: தாய், 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 25, ஏப்ரல் 2025 7:35:07 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மீது வேன் மோதல்: குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் காயம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:00:16 PM (IST)

என்டிபிஎல் அனல்மின் நிலைய ஊழியர்கள் 9வது நாளாக போராட்டம் : 750 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:22:49 PM (IST)

மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 4:13:12 PM (IST)

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு? பொது அறிவிப்பு வெளியீடு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 3:53:52 PM (IST)

SRINIVASANMar 19, 2025 - 11:15:55 AM | Posted IP 104.2*****