» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு

செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)



பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ள நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பா.மூர்த்தி பாராட்டு தெரிவித்தார். 

தேசிய அளவில் என்.சி.சி. மாணவர்களுக்கு இடையேயான புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி.யில் உள்ள 9ம் வகுப்பு மாணவன், டேவிட் சாலமோன் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று தனது கண்டுபிடிப்பிற்காக முதல் பரிசு பெற்றுள்ளார். 

அம்மாணவன், பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார். அம்மாணவனின் கண்டுபிடிப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. முதல் பரிசு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவன் டேவிட் சாலமோனுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பா.மூர்த்தி கேடயம் மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டினார். 

மேலும் அவர் அம்மாணவனுடைய கண்டுபிடிப்பு குறித்து முழுமையாக கேட்டறிந்து அம்மாணவன் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்தினார். இந்த நிகழ்வில் வரம் அறக்கட்டளை நிறுவனரும் பொறியாளருமான நாகராஜ், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ், தமிழ்நாடு என்.சி.சி. 5வது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் பாண்டி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோபாலகிருஷ்ணன், சதீஷ்குமார், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory