» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST)

கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மார்க்கெட் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று தைப்பூசம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மார்க்கெட் முருகன் கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதிலும் வடக்கு பகுதியில் கோவில் வாசல் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததால் பக்தர்களினால் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மெயின் சாலை பகுதியில் இருந்த வாசலில் இருந்த பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்ததால் பக்தர்கள் பரிதவித்தனர். மறுபுறம் மார்க்கெட் மெயின் சாலையில் இருபுறம் லாரிகள் நின்றதால் அப்பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடி. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, மார்க்கெட் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை. பள்ளி நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமைச்சர்கள் பேச்சை நீக்க கோரி அ.தி.மு.க. வெளிநடப்பு
புதன் 15, அக்டோபர் 2025 4:10:54 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்தான் முக்கிய காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புதன் 15, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)
