» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST)

கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மார்க்கெட் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று தைப்பூசம் என்பதால் ஏராளமான பக்தர்கள் மார்க்கெட் முருகன் கோவிலுக்கு வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதிலும் வடக்கு பகுதியில் கோவில் வாசல் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததால் பக்தர்களினால் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மெயின் சாலை பகுதியில் இருந்த வாசலில் இருந்த பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்ததால் பக்தர்கள் பரிதவித்தனர். மறுபுறம் மார்க்கெட் மெயின் சாலையில் இருபுறம் லாரிகள் நின்றதால் அப்பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடி. மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, மார்க்கெட் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை. பள்ளி நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

வீடுகளுக்கான மின் கட்டண உயராது; 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் - அமைச்சர் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:45:26 AM (IST)
