» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன்
வியாழன் 28, நவம்பர் 2024 10:51:12 AM (IST)
பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, தொழிலாளர் நலத் துறை செயலர் கொ.வீரராகவராவ் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பயிலரங்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: சமூகநலத் துறை, கல்வித் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை, காவல் துறை ஆகிய 4 துறைகளும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய அளவில் பணிபுரியும் பெண்கள் 42 சதவீதம் பேர் இருப்பது தமிழகத்தில்தான்.
எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் மூலம், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் 24,131 உள்ளக புகார் குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில், 5,498 இடங்களில் ‘பிங்க்’ பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சமூகநலத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிக்கிறார்கள்.
எனவே, பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். பெண்கள் புகார் அளித்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், தமிழகத்தில் பிற மாநில பெண்களும் அதிகளவில் பணிபுரிகிறார்கள்.
எனவே, உள்ளக புகார் குழுக்களில் பிற மாநில பெண்களையும் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சமூகநலத் துறையில் மகளிரின் உதவிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, ‘மகளிர் உதவி எண் திட்டம் 181’ சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)
