» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: தூத்துக்குடி தம்பதி கைது!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:24:26 AM (IST)
பூதப்பாண்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (37). பட்டதாரியான இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் சுப்பையார்புரம் 2-வது தெருவை சேர்ந்த செலின் சரத்ராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது, செலின் சரத்ராஜூம் அவரது மனைவியும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜகோபாலிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தம்பதி பணமோசடி செய்து ஏமாற்றியதை அறிந்த ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி ராஜகோபால் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செலின் சரத்ராஜ், அவரது மனைவி மஞ்சு ஆகிேயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தூத்துக்குடிக்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவன்-மனைவி இருவரும் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஊட்டிக்கு சென்று செலின் சரத்ராஜ், மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்து பூதப்பாண்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமைச்சர்கள் பேச்சை நீக்க கோரி அ.தி.மு.க. வெளிநடப்பு
புதன் 15, அக்டோபர் 2025 4:10:54 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 12:38:23 PM (IST)

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
புதன் 15, அக்டோபர் 2025 12:26:15 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்தான் முக்கிய காரணம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புதன் 15, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)
