» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி காவல் மரணம்: அரசே இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது – கனிமொழி எம்பி கண்டனம்

வியாழன் 23, ஜூலை 2026 3:34:10 PM (IST)

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் இளைஞர் ஒருவர் காவல் நிலையச் சித்திரவதையால் உயிரிழந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் 'அரசு' என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

எவன்Jul 23, 2026 - 06:02:54 PM | Posted IP 162.1*****

இழவு வீட்டில் அரசியல் செய்யும் கட்சி தான் திமுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory