» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிப் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு இயந்திரவியல் (Mechanical) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E) அல்லது பட்டயம் (Diploma) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பி.ஏ. (B.A.), பி.எஸ்சி. (B.Sc.), பி.காம். (B.Com) போன்ற இளங்கலைப் பட்டம் பெற்ற தமிழக மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலோ அல்லது மே 2026-லோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்ட (NATS) அதிகாரப்பூர்வ வலைதளமான https://nats.education.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 28, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளூர் - சுசீந்திரம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:49:07 PM (IST)

மண்டைக்காடு பகுதியில் நீர்நிலைகளை ஆட்சியர் ஆய்வு : கோவில் குளத்தினை தூர்வார உத்தரவு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:07:44 PM (IST)

புதுக்கடை அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 12:28:29 PM (IST)

பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:52:22 AM (IST)

நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர் வீட்டில் திருடிய ஆந்திர வாலிபர் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:30:35 AM (IST)

குமரி மாவட்டத்தில் புதிய சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:37:08 PM (IST)


