» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிப் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு இயந்திரவியல் (Mechanical) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E) அல்லது பட்டயம் (Diploma) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பி.ஏ. (B.A.), பி.எஸ்சி. (B.Sc.), பி.காம். (B.Com) போன்ற இளங்கலைப் பட்டம் பெற்ற தமிழக மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலோ அல்லது மே 2026-லோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்ட (NATS) அதிகாரப்பூர்வ வலைதளமான https://nats.education.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 28, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)

விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)


