» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!

திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

JwlThefekkr.jpg

திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66). இவர் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது கழுத்திலிருந்த 6 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

நகை திருட்டுப் போனது குறித்து மரியஅஞ்சலி உடனடியாகத் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டு கும்பலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், வேர்க்கிளம்பிப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இரு பெண்களைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கொடிக்கால்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (44), லட்சுமி (40) என்பதும்,  மரியஅஞ்சலியின் தங்கச் சங்கிலியைத் திருடியதும்தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை விற்கப்பட்டதில் கிடைத்த ரூ.21,000 ரொக்கப் பணத்தைத் திருவட்டார் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory