» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அருமனை பேரூராட்சித் தலைவர் லதிகாமேரி மற்றும் அவரது கணவர் ஸ்காட்வின் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து குமரி மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியின் 14-வது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லதிகாமேரி. 

இவர் கட்சியின் வலியவிளை கிளை உறுப்பினரான ஸ்காட்வின் என்பவரின் மனைவி ஆவார். வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் தேர்தலிலும் வெற்றி பெற்று அருமனை பேரூராட்சித் தலைவராக லதிகாமேரி செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் லதிகாமேரி மற்றும் அவரது கணவர் ஸ்காட்வின் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிபிஐ(எம்) குமரி மாவட்டக் குழு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory