» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அருமனை பேரூராட்சித் தலைவர் லதிகாமேரி மற்றும் அவரது கணவர் ஸ்காட்வின் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குமரி மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியின் 14-வது வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லதிகாமேரி.
இவர் கட்சியின் வலியவிளை கிளை உறுப்பினரான ஸ்காட்வின் என்பவரின் மனைவி ஆவார். வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் தேர்தலிலும் வெற்றி பெற்று அருமனை பேரூராட்சித் தலைவராக லதிகாமேரி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், பேரூராட்சித் தலைவர் லதிகாமேரி மற்றும் அவரது கணவர் ஸ்காட்வின் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி சிபிஐ(எம்) குமரி மாவட்டக் குழு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:53:26 PM (IST)


