» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பாலிடெக்னிக் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

சனி 4, ஜூலை 2026 10:14:03 AM (IST)

தூத்துக்குடியில் பெற்றோருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் இசக்கி மகாராஜன் (17). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு EEE படித்து வந்தார். இசக்கி மகாராஜன் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்லாததால் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோரிடம் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

நேற்று மதியம் பெற்றோர் சொந்த ஊரான தட்டப்பாறைக்குச் சென்ற நிலையில், மாலையில் தனது தாயைத் தொடர்பு கொண்டு போனில் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கண்ணாடி, பாத்திரங்களை அடித்து உடைத்துவிட்டு, வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மேற்கூரை கம்பியில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் பெற்றோர் போன் செய்தபோது எடுக்காததால், அவர்களது உறவினர் ரகு நேரில் சென்று பார்த்தபோது இசக்கி மகாராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச் சம்பவம் குறித்துவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

செல்போன்Jul 5, 2026 - 01:46:05 PM | Posted IP 172.7*****

தான் எல்லாத்துக்கும் காரணம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory