» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள மரங்கள் சேதம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 4:34:45 PM (IST)

தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மர அறுவை ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 400 டன் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள 'ஜான் சா மில்' என்ற தனியார் மர அறுவை ஆலையின் சேமிப்புக் கிடங்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 400 டன் மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்த ஆலையின் வளாகத்தில் மொத்தம் 2 லட்சம் டன் அளவிலான மரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு பகுதியில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டு, தீ வேகமாகப் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயை அணைக்கும் பணியில் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய வாகனம், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வாகனம், தூத்துக்குடி அனல்மின் நிலைய வாகனம், வ.உ.சி துறைமுக தீயணைப்பு வாகனம் மற்றும் ஸ்பிக் தனியார் நிறுவன தீயணைப்பு வாகனம் என மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
இந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளைத் தூத்துக்குடி மாவட்ட உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி, தூத்துக்குடி நிலைய உதவி அலுவலர் கோமதி அமுதா, சிப்காட் நிலைய போக்குவரத்து அலுவலர் புன்னவனக்கட்டி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் வளாகத்தில் இருந்த 400 டன் மரங்கள் முழுமையாக எரிந்துள்ளதால், சேத மதிப்பு பல கோடி ரூபாய் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)

மதுபோதை தகராறுகளில் அடுத்தடுத்து பயங்கரம்: 3 பேர் கொலை; இருவர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:40:11 PM (IST)

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)

உணவகங்களுக்கு வெளியே சமையல் அடுப்புகள் வைக்க தடை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு!
திங்கள் 29, ஜூன் 2026 11:57:02 AM (IST)

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)


