» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு!

வெள்ளி 26, ஜூன் 2026 4:15:17 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் தருவை விளையாட்டரங்கத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மைதானத்தில் அமைந்துள்ள ஸ்குவாஷ் உள் விளையாட்டரங்கம், கூடைப்பந்து மைதானம், கால்பந்து மைதானம், கையுந்துப்பந்து மைதானம் மற்றும் நடைபயிற்சி பாதை ஆகியவற்றை ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டார்.

தொடர்ந்து, சமீபத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட நீச்சல்குளம் மற்றும் குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி வசதிகள் குறித்தும், அங்குப் புதிதாக அமைய உள்ள கூடுதல் விளையாட்டு அரங்கப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயரத்தினராஜன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

Huubhutfxd,Jun 29, 2026 - 10:25:29 PM | Posted IP 104.2*****

7yy

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory