» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!

திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)



அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, அவரது சொந்த ஊரான சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று (08-06-2026) நேரில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவர் தனது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். முற்றிலும் மரியாதை நிமித்தமாக மட்டுமே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதிமுக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

BabuJun 8, 2026 - 07:16:20 PM | Posted IP 172.7*****

eps avargl katchiku puthu ratham paichanum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory