» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு எஸ்பி அபிஷேக் குப்தா பாராட்டு!

சனி 6, ஜூன் 2026 4:59:13 PM (IST)



தூத்துக்குடியில், கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு எஸ்பி அபிஷேக் குப்தா நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய இரண்டு காவல் நிலைய கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000  அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேற்படி முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஜெனோவா ஜெனால்ட் கிளிண்டன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இன்று நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory