» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:20:04 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் பள்ளிகளில், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பாக மாவட்டத் தலைவர் ச.மாடசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் ர.ராம் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் "தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியுள்ளபடி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தாங்கள் வசூலிக்கும் முறையான கல்விக் கட்டண விபரங்களை, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் (Notice Board) வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும் என்ற கறாரான உத்தரவு நடைமுறையில் உள்ளது.
ஆனால், தூத்துக்குடியில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த அரசாணையை எள்ளளவும் மதிக்காமல், கட்டண விபரங்களை மறைத்துத் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக மாணவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நடத்தி வரும் இத்தகைய சட்டவிரோதக் கட்டணக் கொள்ளை காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரப் பெற்றோர்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பிரச்சனையில் தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என சங்கம் கோரியுள்ளது.
மாவட்ட அளவில் பிரத்யேக ஆய்வுக்குழு ஒன்றை அவசரமாக அமைத்து, அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா அல்லது கூடுதலாகப் பணம் பறிக்கப்படுகிறதா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், விதிமுறைகளை மீறிக் கூடுதல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்வதுடன், அவர்கள் மீது தங்கு தடையின்றித் கடுமையான சட்டப்படியான மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
VikasaJun 5, 2026 - 04:11:53 PM | Posted IP 104.2*****
Check Vikasa Millerpuram.... Charging Exorbitantly
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)



vikasaJun 6, 2026 - 11:49:30 AM | Posted IP 172.7*****