» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!

வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை (மே 2) முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர், தெங்கம்புதூர் மற்றும் பத்மநாபபுரம், கன்னியாகுமரி, கொல்லங்கோடு ஆகிய மூன்று நகராட்சிகள், 41 பேரூராட்சிகள் மற்றும் 92 ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (30 நாட்களுக்கு), வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து இந்த விநியோகம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory