» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசுப் பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:23:40 PM (IST)

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த வங்கி ஊழியரின் குடும்பத்தினருக்கு, வட்டியுடன் சேர்த்து ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கலக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அஜின் (26), அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, அஜின் தனது மோட்டார் சைக்கிளில் நெடுவிளை கிறிஸ்து அரசர் ஆலயம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், உயிரிழந்த அஜினின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.30,14,792-யை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். மேலும், இந்தத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory