» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் இந்த விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
"தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற மாவட்டத்தின் தேர்தல் இலச்சினையுடன், "100% தவறாமல் வாக்களிப்போம் வாரீர்", "தேர்தல் நாள் ஏப்ரல் 23", "எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்" போன்ற வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை ஆட்சியர் இரா.சுகுமார் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும் பேருந்து நிலையப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வின் இறுதியில், தேர்தலில் கட்டாயம் வாக்களிப்போம் என்பது தொடர்பான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) லதா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

