» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட கப்பல் ஊழியருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 7:57:10 AM (IST)

சாத்தான்குளம் அருகே மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட கப்பல் ஊழியர் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ராமராஜன் (26) என்பவர், தனது நண்பரின் இருசக்கர வாகனம் பழுதானதால் அவருக்கு உதவ இடைச்சிவிளை தேரிவிளை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது தேரிவிளையில் சாலையை மறைத்து ஜெயமுருகன், ராகுல், செல்வம் உள்ளிட்ட 5 பேர் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

அவர்களை வழிவிடுமாறு ராமராஜன் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலால் ராமராஜனை சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தட்டார்மடம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

தமிழன்Feb 9, 2026 - 01:17:38 PM | Posted IP 162.1*****

காரணம் மது போதை , வாழ்க திராவிடம், வாழ்க அரசு டாஸ்மாக்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory